வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Lessons

நேரில் கண்டவை கற்றுத்தந்த பாடங்கள்

இன்று காலையில் தென்னை ஈர்க்குமார் கட்டினைத் தலையிலும்
தேங்காய் நிறைத்த பையினை க் கையிலும் தூக்கிக்கொண்டு 
விற்பதற்கு முதியவர் ஒருவர் வீதியில் போய்க்கொண்டிருந்தார்.
ஆதரவற்ற நிலையில் உழைத்துப் பிழைப்பதைக் காணமுடிந்தது.
பணம் இல்லை என்று நாமெல்லாம் நினைக்கக்கூடாது என்பதை
இக்காட்சி எனக்கு உணர்த்தியது.
இது போன்ற எண்ணற்ற காட்சிகளைத் தினமும் பார்க்கிறேன்.
பொருளாதார நிலை குறித்து திருப்தி உடையவராக நாம்
இருக்க வேண்டும் என்பதையே இக்காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்திய  நாடு ஏழைகள் நிறைந்த நாடு. வறுமையில் வாடும் மக்களை 
எங்கு நோக்கினும் காணலாம். 
பராசக்தி திரைப்படத்தில் 
 "வறுமைப் பேயை விரட்ட நாட்டில் வழியே இல்லையா
அதற்கு அழிவே இல்லையா?" என்ற பாடல் வரிகள் வரும்.
ஆம் . ஒருநாளும் விடிவே கிடையாது என்று கூறும்படிதான்
நிலைமை இருக்கிறது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக